எமது பங்கு

கரம்பொன் வாழ் கத்தோலிக்க மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தினையும், நடைமுறைகளையும் பாதுகாத்து வளர்க்க நாம் எமது தூய செபஸ்தியார் பங்கினூடாக எமது மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றோம். எமது பங்கில் திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, உறுதிப்பூசுதல், குருத்துவம், திருமணம், நோயிற்பூசுதல் ஆகிய திருவருட்ச் சாதனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருவருட்சாதனங்களைப் பெற விரும்புபவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை தொடர்பு கொள்ளவும்.